சம்பவத்தின் பின்னணி: மேல்மருவத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற பொறியியல் கல்லூரி மாணவர், சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பார்ப்பதற்காக அவரது உறவினர்களும், நண்பர்களும் வியாழக்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது பணியில் இருந்து முதுநிலை மருத்துவ மாணவி, இருவர் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று கூறினாராம். இதனால் நோயாளிகள் தரப்பினருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நோயாளியின் உறவினர்கள் முதுநிலை மருத்துவ மாணவியையும், அவருக்கு உதவியாக வந்த பயிற்சி மருத்துவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.