ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பில்லை: ராதாகிருஷ்ணன்

பாதுகாப்புக் கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

News image
Updated On :17 மார்ச் 2017, 7:30 am

தினமணி

சென்னை:  பாதுகாப்புக் கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், அவரது சமாதான முயற்சி இன்றும் பலனளிக்கவில்லை. பயிற்சி மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர். பயிற்சி மருத்துவர்கள் இன்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன், பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் காரணமாக நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், இந்த போராட்டம் குறித்து ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கோவையிலும் போராட்டம் வெடித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையிலும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சிசிடிவி கேமரா பொருத்தவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி: மேல்மருவத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற பொறியியல் கல்லூரி மாணவர், சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பார்ப்பதற்காக அவரது உறவினர்களும், நண்பர்களும் வியாழக்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது பணியில் இருந்து முதுநிலை மருத்துவ மாணவி, இருவர் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று கூறினாராம். இதனால் நோயாளிகள் தரப்பினருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நோயாளியின் உறவினர்கள் முதுநிலை மருத்துவ மாணவியையும், அவருக்கு உதவியாக வந்த பயிற்சி மருத்துவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பணியில் இருக்கும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பணியில் இருந்த மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.