கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

இந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிப்பு: அமைச்சர் ஜெயக்குமார் 

இந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:27 pm

DIN

சென்னை: இந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

மீன்பிடி தடைக்காலம் என்பது பொதுவாக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு விதித்துள்ள தடைக்காலத்தை குறிப்பதாகும்.தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி 45 நாட்கள் வரை இந்த தடைக்காலம் நீடிக்கும்.

ஆனால் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இந்த முறை இந்த மீன்பிடி தடைக்காலமானது 61 நாட்களாக நீடிக்கப்படுகிறது என்று அறிவித்தார். அதன் படி மே 31-ஆம் தேதிக்கு பதிலாக, இனி ஜூன் 15-ஆம் தேதிதான் தடைக்காலம் முடிவடையும்.     

மேலும் மீனவர்களுக்கான ' தாய்க்கப்பல்' திட்டம் விரைவில்  செயல்படுத்தப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேதமடைந்த சென்னை நடுக்குப்பம் மீன் சந்தையானது ரூ.32 லட்சம் செலவில் நிரந்தரமாக புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.