திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எதிர்காலத்தில் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்க அரசு அறிவித்துள்ள விதிமுறைகள்

அங்கீகாரம் இல்லா வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று எதிர் காலத்தில் வீட்டு மனைகளை உருவாக்கும் போது அனுமதி அளிப்பதற்கான விதிமுறைகள்

News image
Updated On :6 மே 2017, 2:08 am

DIN

அங்கீகாரம் இல்லா வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று எதிர் காலத்தில் வீட்டு மனைகளை உருவாக்கும் போது அனுமதி அளிப்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்: இனி வரும் காலங்களில் புதிய வீட்டு மனைகளை அமைக்கும்போது, நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநரின் ஒப்புதலை மட்டுமே பெற வேண்டும்.

அதற்கு முன்பாக, அந்த நிலம் விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலம் என்று குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயத்துறை இணை இயக்குநரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அவ்வாறு அனுமதி வழங்கப்படும் நிலம் ஆறு, ஏரி, குளம், கால்வாய் போன்ற நீர்நிலைகளில் இல்லை என்பதையும் அரசு புறம்போக்கு நிலம், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான நிலம் இல்லை என்பதையும் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டும்.

விவசாயத்துக்குத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடிய தகுதியான நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற ஆட்சியரும், விவசாயத்துறை இணை இயக்குநரும் ஒப்புதல் அளிக்க கூடாது.

இதற்காக நகர் மற்றும் ஊரமைப்பு துணை இயக்குநருடன், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
வீட்டு மனைகளை அமைக்க இயக்குநர் ஒப்புதல் அளித்த பின்னர், உள்ளாட்சி அமைப்புகள் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் 3 சதவீதத்தை கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.