தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கியோர் பட்டியலை வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ்

தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:28 pm

DIN

தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் இருந்து, வருமான வரித் துறையினர் கைப்பற்றிய குறிப்பேடுகளில், மணல் கொள்ளை விவகாரங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெற்ற ரூ.300 கோடி ஊழல் பற்றி விரிவான தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை வருமான வரித் துறையே தலைமைச் செயலாளருக்கு அனுப்பி, ஊழல் குறித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறது.
அதிமுகவின் இரு அணிகளும் ஊழலில் எந்தளவுக்கு மூழ்கிக் கிடக்கின்றன என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீதும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் வெளிவந்துள்ள முதல்வர் விரிவான காப்பீட்டுத் திட்ட ஊழல்கள் குறித்து உடனடி விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
நேர்மையானவர் என்று பெயர் பெற்றிருக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, ஊழல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தலைமைச் செயலாளருக்கு உள்ள அதிகாரத்தைச் சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும்.
ராமதாஸ்: தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாகவும் இதுகுறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரிடமிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கைநீட்டி பணம் வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாகக் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிகவும் நேர்மையான அதிகாரி. சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.