திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் நிச்சயம் பங்கேற்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி அவ்வப்போது சென்னை கோபாலபுரம் இல்லம் வந்து, கருணாநிதியை மட்டும் சந்தித்து நலம் விசாரித்துச் செல்கிறார்.
இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கருணாநிதியின் உடல்நலம் தொடர்பாக விசாரிப்பதற்காக வந்துள்ளேன்.
இப்போது நான் திமுகவிலேயே இல்லை. அதனால், திமுகவின் செயல்பாடுகள் தொடர்பாக எதுவும் சொல்ல விரும்பவில்லை. கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் நிச்சயம் பங்கேற்பேன் என்றார்.