ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நெடுஞ்சாலைகளில் சொகுசு பார்களில் மது விற்பனை செய்ய அனுமதி: வழக்கினை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சொகுசு பார்களில் மது விற்பனை செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஜுலை இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைத்து ...

News image
Updated On :9 மே 2017, 10:37 am

DIN

புதுதில்லி: நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சொகுசு பார்களில் மது விற்பனை செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஜுலை இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுமாறு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து அந்த கடைகளை அகற்றியுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு உணவு விடுதி மற்றும் பார் உரிமையாளர்கள் நலச் சங்கம் என்ற அமைப்பின் சார்பில் உச்ச நீதின்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சொகுசு பார்களில் மட்டும் மது விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதின்றமானது இது தொடர்பாக பல்வேறு தரப்புகளிடம் இருந்து விளக்கங்களை பெற வேண்டியிருப்பதால், இந்த வழக்கானது ஜுலை இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.