திருவண்ணாமலை அருகே ராணுவ வீரரின் மனைவியை கொன்று 70 சவரன் நகை கொள்ளை


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ராணுவ வீரரின் மனைவியை கொன்று 70 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுகாநல்லூரைச் சேர்ந்தவர் சங்கம். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காந்தரூபியை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்து 70 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை மற்றும் கொள்ளையில் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் உறவினர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். மர்ம நபர்களை பிடிக்க தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...