சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 85 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 92.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 92 சிறைக்கைதிகள் பிளஸ் 2 தேர்வெழுதினர். அதில், 85 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.