தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை: 23 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு
போக்குவரத்து தொழிளார்கள் வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது.


சென்னை: போக்குவரத்து தொழிளார்கள் வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது.
புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 23 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேருந்துகள் இயக்கம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...