பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கார்த்தி சிதம்பரத்திடம் வாக்குமூலம் பதிவு செய்கிறது சிபிஐ

ஐஎன்எக்ஸ் குழுமத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் கீழ், கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ வாக்குமூலம் பதிவு செய்து வருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:32 pm

DIN

சென்னை: ஐஎன்எக்ஸ் குழுமத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் கீழ், கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ வாக்குமூலம் பதிவு செய்து வருகிறது.

2008ம் ஆண்டு சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் முறைகேடு நிகழ்ந்ததாகப்  புகார் எழுந்தது.

மேலும், ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் 35 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.