சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

பண்ருட்டி வட்டம் 1426-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி 25ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On :25 மே 2017, 12:28 pm IST


பண்ருட்டி: பண்ருட்டி வட்டம் 1426-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி 25ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜமாபந்திக்கு சார் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் விஜய் ஆனந்த், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராஜவேல், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வி. செந்தில்வேல் ஜமாபாந்தி மேலாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.

முதல் நாளான இன்று நெல்லிக்குப்பம் குறுவட்டத்தைச் சேர்ந்த பொங்கராயனுர், சித்தரசூர், சாத்திப்பட்டு, கீழ்ப்பாதி, மேல்பாதி உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், வீட்டு மனைப் பட்டா, உதவியோர் உதவைத் தொகை தொடர்பான மனுக்களை அளித்து வருகின்றனர்.

இந்த கோரிக்கை மனுக்கள் மீது வருவாய் தீர்வாய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.