நெய்வேலியில், செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்துச்சென்ற மூன்று பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி வட்டம் 5-ஐ சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி காலைசெல்வி. வட்டம் 19-ஐ சேர்ந்தவர் சையத் முஸ்தபா, இவரது மனைவி தில்ஷாத் பேகம். வட்டம் -25 கேரளா சாலையில் வசிப்பவர் சரஸ்வதி. இவரது கணவர் சங்கர் என்.எல்.சி.யி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த பொழுது கலைசெல்வி, சரஸ்வதி, தில்ஷாத் பேகம் அவரவர் வசிப்பிடம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்பகள், வாகனத்தை ஓட்டிய படி மூன்று பெண்களிடமும் சுமார் 13 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.