கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பணிமனை விபத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பு

பொறையாறு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் இறந்த போக்குவரத்து ஊழியர்கள் 8 பேரின்

News image
பொறையாறில் போக்குவரத்துக் கழகப் பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் இறந்த போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதிக்கான காசோலை வழங்குகிறார் அமைச்சர் ஓ.எஸ். மணியன். 
Updated On :2 நவம்பர் 2017, 7:33 pm

DIN

பொறையாறு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் இறந்த போக்குவரத்து ஊழியர்கள் 8 பேரின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 7.5 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், பொறையாறில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில், ஊழியர்கள் ஓய்வுப் பிரிவு கட்டடம் கடந்த அக். 20-ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி பொறையாறில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்கள் எம். அன்பரசன், பி. மணிவண்ணன், ஜெ. பிரபாகரன், ஜெ. பாலு, ஆர். சந்திரசேகரன், எஸ். முனியப்பன், டி. தனபால், ஜி. ராமலிங்கம் ஆகியோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 7. 5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், பலத்த காயமடைந்த பேருந்து நடத்துநர் எஸ். வெங்கடேசனுக்கு ரூ. 1.5 லட்சத்துக்கான காசோலையையும், காயமடைந்த நடத்துநர்கள் ஜெ. செந்தில்குமார், ஜி. பிரேம்குமார் ஆகியோருக்கு தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி, வி. ராதாகிருஷ்ணன், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.