ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய விசாரணை: இரு அரசு மருத்துவர்களுக்கு சம்மன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையினைத் துவங்கியுள்ள ஒரு நபர் ஆணையம்,   இரு அரசு மருத்துவர்களுக்கு  நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2017, 7:32 am

DIN

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையினைத் துவங்கியுள்ள ஒரு நபர் ஆணையம்,   இரு அரசு மருத்துவர்களுக்கு  நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம், சென்னை எழிலகக் கட்டடத்தின் கலசமஹாலில் , இன்று முறைப்படி தனது விசாரணையைத் தொடங்கியது.

ஆணையத்தின் விசாரணை தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு இரு அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஆஜராகி பிரமாணப் பாத்திரங்களை தாக்கல் செய்யலாம்.

மரணம் தொடர்பாக யாராக இருந்தாலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

உண்மையை முழுமையாக வெளிக்கொணர்வதே ஆணையத்தின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.