கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் இலங்கை கடற்படையால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:52 pm

DIN

எல்லை தாண்டி மீன் பிடித்தது உள்ளிட்ட விவகாரங்களால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவர். மேலும் அவர்களிடம் இருந்து விசைப்படகு, வலை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்வர்.

இந்நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரத்தில் 5 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இலங்கையின் காங்கேசந்துறை கடற்படை தடவாளத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதன்பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அக்டோபர் 25-ந் தேதி வரை 5 தமிழக மீனவர்களையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து,  இந்த 5 மீனவர்களும் வாவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.