வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: விஜயகாந்த் வேண்டுகோள்! 

டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:53 pm

DIN

சென்னை; டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார். முன்னதாக திருவள்ளூர் அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கபட்டவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

அந்த வரிசையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் மருத்துவமனையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் அனைவருக்கும்  ரொட்டி, பழம் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கூறியதாவது:

கடமையாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இவற்றை விட்டு விட்டு ஆட்சியை காப்பாற்றுவதிலேயே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள்,

டெங்கு காய்ச்சல் பற்றி தமிழகத்தில் மத்தியக்குழு தாமதமாக ஆய்வு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாட்டில் இல்லாததே டெங்குவை கட்டுப்படுத்தாதற்கு ஒரு காரணமாகும், டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.