சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முதல்வர் பழனிசாமி ஆவேசம்

இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2017, 7:14 am

DIN


சென்னை: இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு  கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (செப்.12) 10.35 மணியளவில் நடைபெற்றது. இதில், சசிகலா நீக்கம் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டன.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் பேசி வருகிறார். அவரது பேச்சில், பொதுகுழுவுக்கு தடைவிதிக்க முயற்சித்த நிலையில், பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்காததே, நமக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.

மேலும், பிரிந்த இயக்கம் ஒன்றுசேர்ந்த வரலாறு இல்லை. ஆனால், நாம் சேர்ந்திருக்கிறோம். தமிழகத்தில் ஆண்ட கட்சியே தொடர்ந்து மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது அதிமுக மட்டுமே எனவும் இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முதல்வர் ஆவேசமாக பேசினார்..

ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.