

ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசவுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிகை இழந்துள்ளதாக ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.
இதனிடையே சென்னை வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதலவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணியளவில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவரிப்பார் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.