யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா: ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

News image
Updated On :21 செப்டம்பர் 2017, 6:00 am

DIN


சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கப்பட்டது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் மனுவை தாக்கல்  செய்துள்ளார்.

அந்த மனுவில், பணப்பட்டுவாடா தொடர்பாக மாநில காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கே உள்ளது.

பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.