காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத் தகவலில்,
தெலங்கானா முதல் தென்தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு. அதேநேரம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.