ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலர் இருவரின் மாத ஊதியத்தை நிறுத்திவைத்து உயர் நீதிமன்றம் அதிரடி!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலர் ஆகியஇருவருக்கும் இம்மாத ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2017, 8:46 am

DIN

சென்னை: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலர் ஆகியஇருவருக்கும் இம்மாத ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த ராசி மண்டபம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பரீதா சவுக்கத். இவருக்குச் சொந்தமான இடத்தில்தான் மாதவரம் தாலுகா அலுவலகம் கடந்த 2015-ஆம் வருடம் மே மாதம் முதல் இயங்கி வருகிறது.முதலில் ஒரு வருடத்திற்கு வாடகை ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் தொடர்ந்து மாத வாடகை முறையாக வழங்கப்படவில்லை. அத்துடன் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் தற்பொழுது புதிதாக வாடகை ஒப்பந்தமும் போடப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளை பரீதா சவுக்கத் பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட பொழுதும் முறையான பதில் இல்லை.

எனவே நிலுவையில் உள்ள வாடகைப்பணத்தை வழங்க வேண்டும் என்றும்,  புதிதாக முறையான வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ளவும் மாதவரம் தாலுகா அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி மூதாட்டி பரீதா சவுக்கத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, மாதவரம் தாலுகா அலுவலகம் மூதாட்டி பரீதா சவுக்கத்துக்கு  உடனடியாக நிலுவையில் உள்ள வாடகை பாக்கியினை வழங்க வேண்டும் என்றும், புதிய வாடகை ஒப்பந்தமும் விரைந்து போட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வாடகை ஒப்பந்தம் போடப்படும் வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலர் ஆகியஇருவருக்கும் நடப்பு மாத ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.