மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போயஸ் கார்டன் முதல் அப்பல்லோ வரை: செப்டம்பர் 26ம் தேதி இரவு நடந்தது என்ன?

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட  அதிகாரப்பூர்வ ஆவணம் ஊடகங்கள் வாயிலாக வெளியானது.

News image
Updated On :28 செப்டம்பர் 2017, 5:50 am

DIN


சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட  அதிகாரப்பூர்வ ஆவணம் ஊடகங்கள் வாயிலாக வெளியானது.

அப்பல்லோவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடல்நிலை எப்படி இருந்தது, அவர் போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு எப்படி கொண்டு வரப்பட்டார் என்பது குறித்த அனைத்துத் தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதாவது, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு போயஸ் கார்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 3 மருத்துவர்கள் கொண்ட குழு போயஸ் கார்டன் விரைந்தது. அங்கு முதல் தளத்துக்கு சென்றனர்.

அங்கிருந்த அறையில் படுக்கையில் இருந்த ஜெயலலிதாவை மருத்துவர்கள் எழுப்ப முயன்ற போது அசைவு மட்டுமே இருந்தது. அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. 

உடனடியாக மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் உதவியோடு ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் அவரது உடலில் ரத்த அளவு அபாய அளவில் இருந்ததை உறுதி செய்கிறது.

அவரது உடலில் காயமோ, புண்களோ இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ம் தேதி காலை மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவில் பங்கேற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை திடீரென இந்த அளவுக்கு மோசமடையக் காரணம் என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.