தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மூன்றாண்டு உறுப்பினராக இருந்தால் வீடுகட்ட கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்பத்தூர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் கேசவராவ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்து வரும் நபர்கள் வீடு கட்டத் தேவையான நிதியை அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி வீடு கட்ட, அல்லது கட்டிய வீட்டை வாங்குதல் போன்றவறுக்காக தங்களது பி.எஃப். நிதியை தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 044-26350080,26350110,26350120 அல்லது sro.ambattur@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என வி.எஸ்.எஸ்.கேசவராவ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்

திருப்பரங்குன்றத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு திமுக, பாஜகதான் காரணம்: சிடிஆர். நிர்மல் குமார்
மமதாவின் ஹெலிகாப்டர் அருகில் பறந்த மர்ம ட்ரோனால் பரபரப்பு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

