அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மமதாவின் ஹெலிகாப்டர் அருகில் பறந்த மர்ம ட்ரோனால் பரபரப்பு!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அருகில் அடையாளம் தெரியாத மர்ம ட்ரோன் பறந்தது குறித்து...

News image

மமதா பானர்ஜி (கோப்புப் படம்) - PTI

Updated On :4 ஏப்ரல் 2026, 11:41 am

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அருகில் மர்ம ட்ரோன் ஒன்று பறந்ததால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.

இதனால், ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அம்மாநிலம் முழுவதும் பயணித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மால்டா நகரத்தில் சனிக்கிழமை (ஏப். 4) அன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மமதா மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்கப் புறப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் மமதா அவரது ஹெலிகாப்டரின் அருகில் வந்தபோது அப்பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. இதையடுத்து, அந்த மர்ம ட்ரோன் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 26 அன்று முதல்வர் மமதா பயணித்த விமானம் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றால், கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

mysterious drone was spotted flying near Bengal CM Mamata Banerjee's helicopter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.