அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் இரு அணிகளும் திங்கட்கிழமை இணைந்தன.
இதையடுத்து தமிழக அமைச்சரவைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராக பதவியேற்றார்.
மேலும், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராகவும் ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதல்வராகவும், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்.
அதுமட்டுமல்லாமல் சசிகலா குடும்பம் அதிமுக-வில் இருந்து முழுமையாக நீக்கப்படும் என இருவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கட்கிழமை இரவு டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரும் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் சென்றனர்.