சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் மட்டுமே ஐபிஎல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன்: சுமந்த் ராமன்

காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதற்கு இணையான அமைப்பை உருவாக்கும்வரை இந்த வருடம் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்தையும் நேரில் சென்று... 

News image
Updated On :4 ஏப்ரல் 2018, 8:55 am

எழில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்தி, அரசியல் விமரிசகர் சுமந்த் ராமன் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது: 

நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து ட்வீட் செய்தேன். அப்போதுதான் யோசித்தேன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அனைவரும் போராடிக்கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டியை ரசிப்பது நியாயமா என்று. இச்சமயத்தில் அனைவருடைய ஒற்றுமை அவசியம். 

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதற்கு இணையான அமைப்பை உருவாக்கும்வரை இந்த வருடம் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்தையும் நேரில் சென்று பார்க்க மாட்டேன். அதேபோல ஐபிஎல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டேன். வாழ்க்கையில் சில விஷங்கள் ஒரு விளையாட்டுப் போட்டியை விடவும் பெரிதானவை. நம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க இது சரியான தருணம் என்று எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.