சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டங்களில், 10 எம்எல்ஏக்கள் உட்பட 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இன்று நடத்திய முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் பரவலாக சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னையில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, சென்னையில் 35 இடங்களில் சாலை மறியல், 5 இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னையில் 51 இடங்களில் நடத்தப்பட்ட ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களில் 6000 பேர் கைது செய்யப்பட்டனர். அண்ணா சாலையில் நடந்த போராட்டத்தின் போது மு.க. ஸ்டாலின் உட்பட 10 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டக்காரர்களால், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 10 பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈஷா யோக மையத்தில் இளைஞா் தற்கொலை
முதல்வருக்கு கீரை அனுப்பும் போராட்டம்: தமிழ்ப் புலிகள் கட்சியினா் கைது

மகள் கொலை வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வந்த தந்தை கொலை
ஆன்லைன் லாட்டரி விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



