திருவாரூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றபோது திமுக பிரமுகர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் ரயில்வே மேம்பால ரவுண்டானாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, வர்த்தகர் சங்க கட்டடத்திலிருந்து அனைவரும் பேரணியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, முன்வரிசையில் வந்து கொண்டிருந்த திமுக பிரமுகர் திடீரென மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். அப்போது, அவருடன் வந்து கொண்டிருந்தவர்களும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் உடனடியாக அவரை தடுத்து மீட்டனர். விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர் திருவாரூர் நகராட்சி 28-ஆவது வார்டை சேர்ந்த மோகன் என்பது தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









