சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சாலை மறியல்: தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகர்

திருவாரூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றபோது திமுக பிரமுகர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :6 ஏப்ரல் 2018, 1:25 am IST

திருவாரூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றபோது திமுக பிரமுகர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் ரயில்வே மேம்பால ரவுண்டானாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, வர்த்தகர் சங்க கட்டடத்திலிருந்து அனைவரும் பேரணியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, முன்வரிசையில் வந்து கொண்டிருந்த திமுக பிரமுகர் திடீரென மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். அப்போது, அவருடன் வந்து கொண்டிருந்தவர்களும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் உடனடியாக அவரை தடுத்து மீட்டனர். விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர் திருவாரூர் நகராட்சி 28-ஆவது வார்டை சேர்ந்த மோகன் என்பது தெரிய வந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.