சேலம் லைன்மேடு பகுதியில் தெற்கு தபால் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் லைன்மேட்டில் உள்ள கே.எஸ். தியேட்டர் அருகில் சேலம் தெற்கு தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் இளைஞர்கள் சிலர் தபால் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது.
இதனிடையே, வியாழக்கிழமை காலை தபால் நிலையத்தை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் அலுவலகத்தின் முன்புறம் பெட்ரோல் குண்டு வீசி இருப்பதையும், பாட்டில்கள் சிதறி கிடப்பதையும் கண்டு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் குமார் தபால் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவானவர்களைத் தேடி வருகிறார். தபால் நிலையம் அருகில் உள்ள கடை மற்றும் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் பார்வையிட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



