சேலம் லைன்மேடு பகுதியில் தெற்கு தபால் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் லைன்மேட்டில் உள்ள கே.எஸ். தியேட்டர் அருகில் சேலம் தெற்கு தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் இளைஞர்கள் சிலர் தபால் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது.
இதனிடையே, வியாழக்கிழமை காலை தபால் நிலையத்தை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் அலுவலகத்தின் முன்புறம் பெட்ரோல் குண்டு வீசி இருப்பதையும், பாட்டில்கள் சிதறி கிடப்பதையும் கண்டு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் குமார் தபால் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவானவர்களைத் தேடி வருகிறார். தபால் நிலையம் அருகில் உள்ள கடை மற்றும் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் பார்வையிட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








