சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது உட்பட 90 விருதுகளை, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கி கௌரவித்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 2017ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உவேசோ விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, 2016ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதுகள் என மொத்தம் 90 விருதுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.
தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் சான்றோர்களையும், தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, ஆண்டு தோறும் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட தமிழ் அறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் இன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று 4, நாளை 3 மாவட்டங்களில் கனமழை!

போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை! ஜான் பிரிட்டோ

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 37 பேர் பலி; 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி... வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


