காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது.
முழு அடைப்பையொட்டி தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லக் கூடிய அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும், அதே போன்று சத்தியமங்கலத்திற்கு இயக்கப்படும் கர்நாடகா மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
முழு அடைப்பு காரணமாக தமிழக - கர்நாடக எல்லையில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










