மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெரம்பூர் திருமண மண்டபத்தில் தங்கவைப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெரம்பூர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 12:18 pm IST


சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெரம்பூர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு, இன்று காலை சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரீனா நோக்கி ஊர்வலமாகச் சென்ற திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அங்கிருந்து வாகனத்தில் அழைத்து வரப்பட்ட தலைவர்கள், பெரம்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.