பணியின் போது உயிரிழந்த 10 காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:-சென்னை செம்மஞ்சேரி காவல் நிலைய சட்டம்-ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளர் சி.தேவேந்திரன், திண்டுக்கல் அம்பாத்துரை சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பிரபாகர நாகேந்திர ராஜா, சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர் எம்.முரளிகுமார், திருப்பூர் மூலனூர் தலைமைக் காவலர் கே.மோகன்ராஜ், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் க.ரவிச்சந்திரன், நீலகிரி லவ்டேல் காவலர் டி.உதயகுமார், திருச்சி பொன்மலை தலைமைக் காவலர் ஏ.ஜான்பிரிட்டோ, கும்பகோணம் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் பி.நடராஜன், மதுரை மாநகரம் திலகர் திடல் தலைமைக் காவலர் எஸ்.கருப்பையா, விருதுநகர் காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் உடல்நலக் குறைவு, சாலை விபத்து போன்ற காரணங்களால் உயிரிழந்தனர்.
உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக பிரசாரம்; திருச்சி வந்தடைந்த விஜய்! | TVK

இந்த வாரம் கலாரசிகன் - 19-04-2026
சட்டப்பேரவையில் விசில் அடிக்க முடியாது: திருமாவளவன்

தே. ஜ. கூட்டணிக்கு ஆதரவாக நாளை கோவையில் சந்திரபாபு நாயுடு பிரசாரம்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

