

சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை பதில் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளார்.
நிகழ்ச்சி ஒன்றுக்காக சேலம் வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நேரில் சந்தித்து வலியுறுத்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை. அது தொடர்பாக நினைவூட்டுக் கடிதமும் அனுப்பினோம். அதற்கும் பதில் வரவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.