47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும் என பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யம்

News image
Updated On :20 டிசம்பர் 2018, 4:53 am

DIN


சென்னை: நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும் என பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் பேசுகையில், நேர்மையான அதிகாரிகள் மீது அரசியல் அழுத்தம் இருக்கும், அதனை புறந்தள்ளிவிட்டு அதிகாரிகள் பணிபுரியவேண்டும்.  

ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் படிப்படியாக, ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்; வங்கி கணக்கிற்கு பணம் வந்தால் நல்லது தான்.

சீதக்காதி படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தது பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளிக்கையில், படங்களின் மீது வழக்கு போடுவது, எனது படங்களில் இருந்து துவங்கியது என்பது வருத்தம் அளிக்கிறது. படத்தை பார்த்து விட்டு, தவறுகள் இருந்தால் பின்னர் கருத்து தெரிவிக்க முடியும் என்றவர் நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது என்றார் கமல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.