வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்: 515 பட்டாசு தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பட்டாசு தொழிலாளர்கள் 515 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 2:12 pm IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பட்டாசு தொழிலாளர்கள் 515 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பசுமை பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பசுமை பட்டாசு குறித்த வழிகாட்டுதல் இல்லாததால், தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க மறுத்து, அதன் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கடந்த 21ஆம் தேதி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக ஒண்டிப்புலி வருவாய் ஆய்வாளர் காஜா கரிம் நிவாஸ் சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்தப் புகாரின் அடிப்படையில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பட்டாசுத் தொழிலாளர்கள் 515பேர் மீது சூலக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.