விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பட்டாசு தொழிலாளர்கள் 515 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பசுமை பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பசுமை பட்டாசு குறித்த வழிகாட்டுதல் இல்லாததால், தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க மறுத்து, அதன் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கடந்த 21ஆம் தேதி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக ஒண்டிப்புலி வருவாய் ஆய்வாளர் காஜா கரிம் நிவாஸ் சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பட்டாசுத் தொழிலாளர்கள் 515பேர் மீது சூலக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மே மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.93% ஆக உயர்வு!

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



