முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஜன. 3-இல் திமுக சார்பில் திருவாரூரில் ஊராட்சி சபைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திருவாரூரில் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ள ஊராட்சி சபைக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Updated On :26 டிசம்பர் 2018, 1:27 am IST


திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திருவாரூரில் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ள ஊராட்சி சபைக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை 12,617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
இந்த ஊராட்சி சபை கூட்டத்தை ஜனவரி 3-ஆம் தேதி திருவாரூரில் மு.க.ஸ்டாலினும், ஈரோட்டில் பொருளாளர் துரைமுருகனும், காஞ்சிபுரத்தில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவும் தொடங்கி வைக்க உள்ளனர்.
மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், நிர்வாகத் தோல்விகளையும் பிரசாரப் பயணமாக எடுத்துச் செல்லக்கூடியது என்பதால் ஊராட்சி சபை கூட்டத்துக்கு தலைமை வகிக்க தலைமைக் கழகத்தில் இருந்து பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தப் பிரசாரத்தின்போது திமுக சார்பில் வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களையும், மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.