கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

யாரை பார்த்தும் அஞ்சமாட்டேன்: விஜயபிரபாகரன் அதிரடி பேட்டி

யாரை பார்த்தும் அஞ்சமாட்டேன், எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன்

News image
Updated On :25 டிசம்பர் 2018, 12:38 pm IST


சென்னை: யாரை பார்த்தும் அஞ்சமாட்டேன், எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார். 

தேமுதிக சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கேக் வெட்டி, அப்பகுதி மக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்தார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்புவார். தேமுதிகவில் எந்த குழப்பமும் இல்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும் என்றார். 

மேலும், யாரை பார்த்தும் நான் அஞ்சமாட்டேன். எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன் என்றவர் கட்சித் தலைமை கூறினால் தேர்தலில் போட்டியிடுவேன் என விஜயபிரபாகரன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.