போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வங்கி ஊழியர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
வங்கிகளை இணைக்கக் கூடாது, ஊதிய உயர்வு வேண்டும், பழைய முறையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய
அளவில் புதன்கிழமை (டிச.26) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால், வங்கிச் சேவையை பெரிதும் நம்பியுள்ள சாதாரண ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.
எனவே, வங்கி ஊழியர் சங்கத்துடன் மத்திய பாஜக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸை விமர்சிப்பதா? - மாணிக்கம் தாகூர்
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

தக்கோலம் அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் ஜூன் 7-ல் கத்திரி பூஜை நிறைவு விழா!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


