ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள்: கமல் அறிவிப்பு

சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :26 டிசம்பர் 2018, 1:24 am IST


சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களுக்கான அரசியல், மக்களுக்கான கட்சி எனும் கொள்கையுடன் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் ஏற்றத்துக்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. புதிய மாற்றத்தினை முன்னிறுத்தி தெளிவாகவும், நேர்மையாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் ஒவ்வொரு நகர்விலும் தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மநீம கட்சியில் வழங்கப்படுவது பதவியல்ல, அது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, அதை உணர்ந்து கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமையுணர்வுடன் செயலாற்றிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யத்துக்காக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 575 -க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.