ஆகவே, மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள் தங்களுடைய பகுதிகளுக்குட்பட்ட உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றிற்கான மறுவரையறை பணிகள் செய்யப்பட்ட வார்டுகளின் விபரங்களை மாவட்ட ஆட்சியர் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமோ அல்லது சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக அரசு அச்சகத்தில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி அரசிதழில் வெளியான தமிழக தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் மறுவரையான அரசிதழினை பெற்றுக் கொண்டு அவரவர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்டு, ஊராட்சி, பேரூர், ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக ஆய்வு செய்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலை சரிபார்த்து, அவைகள் சரியான முறையிலும், பூகோள ரீதியாகவும், தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரிக்கப்பட்டிருக்கின்றதா எனவும், அதே போல் பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்களுக்கான வார்டுகள் எவை எவை என்பதையும் கண்டறிந்து ஆட்சேபம் ஏதும் இருந்தால் அவைகளை எழுத்து மூலமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அல்லது இது சம்பந்தமான தேர்தல் அதிகாரிகளிடம் தங்களுடைய ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.