சாத்தூர் சார்-பதிவாளர்அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை: ரூ. 65 ஆயிரம் பறிமுதல்

சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 
சாத்தூர் சார்-பதிவாளர்அலுவலகத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
சாத்தூர் சார்-பதிவாளர்அலுவலகத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
Updated on
1 min read

சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலையில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் திங்கள்கிழமை மாலை விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் தலைமையில் ஆய்வாளர் பூமிநாதன், காந்தியவன் உள்ளிட்ட அதிகாரிகள் சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சார்-பதிவாளர் பானுமதி, அலுவலக காவலர் முருகேசன் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ. 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சார்-பதிவாளர் பானுமதி, அலுவலக காவலர் முருகேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com