சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலையில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் திங்கள்கிழமை மாலை விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் தலைமையில் ஆய்வாளர் பூமிநாதன், காந்தியவன் உள்ளிட்ட அதிகாரிகள் சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சார்-பதிவாளர் பானுமதி, அலுவலக காவலர் முருகேசன் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ. 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சார்-பதிவாளர் பானுமதி, அலுவலக காவலர் முருகேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவகங்கள் மூடப்படும் அபாயம்

எரிவாயு உருளைகளை பதுக்குவதும், கூடுதல் விலைக்கு விற்பதும் குற்றம்

கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம்

இந்தியாவில் ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகம்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

