எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பல்கலை. நியமன முறைகேடுகள் குறித்து முழு விசாரணை தேவை

பல்கலைக்கழக நியமன முறைகேடுகள் அனைத்தின் மீதும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 8:26 pm

DIN

பல்கலைக்கழக நியமன முறைகேடுகள் அனைத்தின் மீதும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக உயர் கல்வித்துறை பெருமளவில் சீர்கெட்டு இருப்பதையே, கோவை பாரதியார் பல்கலைக்கழக விவகாரம் எடுத்துக் காட்டுகிறது. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்களுக்கான நியமனங்களில் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் தொடர்புடையவர்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவ்வாறு பல்கலைக்கழக கல்வியின் தரத்தையும், மாண்புகளையும் சீர்குலைத்து வரும் இதுபோன்ற நபர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, பல்கலைக்கழக நியமன முறைகேடுகள் அனைத்தின் மீதும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.