எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜெயலலிதா மரணம்: முன்னாள் டிஜிபி ராமானுஜத்திடம் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் வியாழக்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:54 pm

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் வியாழக்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. 
இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அவரது உதவியாளர், இல்லத்தில் வேலை செய்தவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ராமானுஜம்: இந்நிலையில், முன்னாள் டிஜிபி ராமானுஜம் விசாரணை ஆணையத்தில் வியாழக்கிழமை ஆஜரானார். கடந்த 2012-இல் ஓய்வுபெற்ற ராமானுஜத்துக்கு அதற்குப் பின்னரும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 
அதிலிருந்து அவர் ஓய்வுபெற்ற பின் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 
பின்னர், அவருக்குத் தலைமைத் தகவல் ஆணையர் பதவி வழங்கப்பட்டது. 
இவ்வாறு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 10.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.