47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஊதிய உயர்வு வேண்டாம்: சட்டப்பேரவை செயலாளருக்கு டிடிவி தினகரன் கடிதம்! 

சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு தமக்கு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் அளித்துள்ளார்.

News image
Updated On :23 ஜனவரி 2018, 1:10 pm

DIN

சென்னை  சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு தமக்கு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் அளித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

பயணப்படி உள்ளிட்ட இதர படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களின் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த சம்பள உயர்வானது ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு தமக்கு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் அளித்துள்ளார். மேலும் அரசின் நிதி நிலைமை சீராக இல்லாத நிலையில் இந்த ஊதிய உயர்வு தேவையற்றது என்றும் அவர் தனது கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.