கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து வெகுவாக உயர்ந்திருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 2,600 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 5,600 கனஅடியாகவும், பிற்பகல் 2 மணிக்கு தண்ணீர் வரத்து நொடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்தது.
மாலை 4 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 25 ஆயிரம் கனஅடியாக மேலும் உயர்ந்தது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடி என கூறப்படும் நிலையில், தண்ணீர் வரத்து இரவு இன்னும்கூடுதலாக உயரக் கூடும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், பிரதான அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அருவிக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன. அதேபோல, பரிசல் ஓட்டவும் தடை வி திக்கப்பட்டுள்ளது.
மழை : ஒகேனக்கல் உள்ளிட்ட பென்னாகரம் பகுதி முழுவதும் திங்கள்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. தண்ணீர் வரத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

