ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து வெகுவாக உயர்ந்திருக்கிறது.

News image
காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஒகேனக்கல் அருவிகளில் கொட்டும் தண்ணீர்.
Updated On :10 ஜூலை 2018, 5:21 am

DIN

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து வெகுவாக உயர்ந்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 2,600 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 5,600 கனஅடியாகவும், பிற்பகல் 2 மணிக்கு தண்ணீர் வரத்து நொடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்தது.

மாலை 4 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 25 ஆயிரம் கனஅடியாக மேலும் உயர்ந்தது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடி என கூறப்படும் நிலையில், தண்ணீர் வரத்து இரவு இன்னும்கூடுதலாக உயரக் கூடும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், பிரதான அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அருவிக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன. அதேபோல, பரிசல் ஓட்டவும் தடை வி திக்கப்பட்டுள்ளது.

மழை : ஒகேனக்கல் உள்ளிட்ட பென்னாகரம் பகுதி முழுவதும் திங்கள்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. தண்ணீர் வரத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.