கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை?: சென்னை சிறுமி சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஆவேசம்

சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2018, 7:57 am

சென்னை: சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மாற்றுத்திறனாளியான 11 வயதுச் சிறுமி 17 பேரால், கடந்த 7 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மாநிலத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஒரு சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அது இருக்கட்டும். அந்த 17 பேரில் ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை. இது ஒரு தேசிய சோகம் அல்லவா?

இவ்வாறு வைரமுத்து வேதனை பொங்கத் தெரிவித்துளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.