ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி ஒரு உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எம்.துரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுகிறார். அதே வேளையில் நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்ட தேஷ்முக் சேகர் சஞ்சய், ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தினா் 18 போ் காயம்

வண்டல் மண் எடுக்க அனுமதி மறுத்த கோட்டாட்சியா், சத்தி வட்டாட்சியரைக் கண்டித்து கோபியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்






