தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

Updated On :24 ஜூலை 2018, 4:53 am IST

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாகக் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை, இரவில் இடி மேகம் உருவாகக்கூடும்.
தேவாலாவில் 40 மி.மீ.: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 40 மி.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 30 மி.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 20 மி.மீ. மழை பதிவானது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து பலமான காற்று வீசக்கூடும்.
மதுரையில் 102 டிகிரி: தமிழகத்தில் 3 இடங்களில் வெப்பநிலை திங்கள்கிழமை 100 டிகிரியைக் கடந்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102 டிகிரியும், நாகையில் 101 டிகிரியும், தூத்துக்குடியில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரியும், திருச்சி, தொண்டி, வேலூர், கடலூர், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.