தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி பொறுப்பேற்பு

இந்திய கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்தியத்தின் புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

News image

இந்திய கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்திய தளபதியாக திங்கள்கிழமை பொறுப்பேற்ற பரமேஷ் சிவமணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அப்பொறுப்பில் இருந்து விடைபெறும் தளபதி ராஜன் பர்ஹோத்ரா (வலது).

Updated On :24 ஜூலை 2018, 4:53 am IST

இந்திய கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்தியத்தின் புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
இது குறித்து கடலோரக் காவல்படை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. தமிழகம், ஆந்திர மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை இப்பிரிவு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இப்பிராந்தியத்தின் தளபதியாக இருந்து வந்த ராஜன் பர்ஹோத்ரா கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு பிராந்தியத்தின் தளபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிழக்கு பிராந்தியத்தின் புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி நியமிக்கப்பட்டுள்ளார். பரமேஷ் சிவமணி திங்கள்கிழமை பொறுப்பேற்றார். அவருக்கு தற்போதைய தளபதி ராஜன் பர்ஹோத்ரா வாழ்த்துகள் தெரிவித்தார்.
புதிய தளபதியாகப் பொறுப்பேற்ற பரமேஷ் சிவமணி கடலோரக் காவல்படையில் சுமார் 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடலோரக் காவல் படையின் ரோந்து கப்பல்களான அவ்வையார்', விஸ்வாஸ்ட்', சமர்' ஆகிய கப்பல்களில் கேப்டனாக பணியாற்றியுள்ள பரமேஷ் சிவமணி, கடல்சார் வழி மற்றும் திசைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இதற்கு முன்பு புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமை அலுவலகத்தில் துணை இயக்குநராக இருந்து வந்தார். இவரது சேவையைப் பாராட்டி மதிப்பு மிகுந்த தட்ராஷக் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.